முகத்தை பொலிவுடன் வைக்கும் ஆப்பிள்
தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் அரை மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.
ஆப்பிள் துண்டுகள், கேரட் துண்டுகள் இவற்றை துருவி ஜூஸ் செய்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம் மற்றும் பளபளப்பு கூடும்.
சரும நிறத்தை அதிகரிக்க ஆப்பிள் விழுது, பால் பவுடர், பார்லிபவுடர் மற்றும் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.
ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும், குளுமையாகவும் இருக்கும்.
ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீகைக்காய்த்தூள், இதனை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசு பிசுப்பு போய்விடும்.
ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீகைக்காயுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.
No comments