Header Ads

  • Breaking News

    முகத்தின் கருமை நீங்கி பளிச்சிட பயன்படும் தயிர்



     முகத்தின் கருமை நீங்கி பளிச்சிட பயன்படும் தயிர்


    தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை மென்மையாகவும் மாற்றும். தயிர் வயதான தோற்றத்தை மறைத்து, இளமையைத் தக்கவைக்கும். மோரினால் முகத்தைக் கழுவ, வெயிலால் ஏற்படும் கருமை மறையும்.



    தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட், சருமத்தில் உள்ள கருமையை நீக்கும் தன்மை கொண்டது. ஆகவே தினமும் தயிரை முகம் மற்றும் கை, கால்களில் தடவி வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால், முகம் பொலிவாகும். முக்கியமாக, ஒரு மாதத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தினால் முகம் பளபளப்பாகும்.



    கடலை மாவு, தயிர், மஞ்சள் ஆகிய இம்மூன்றையும் கலந்து பேஸ்டாக ஆக்கிக்கொள்ளுங்கள். பிறகு அதை இதமாக முகத்தில் நன்கு தடவி இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு பசும்பால் கொண்டு முகத்தை கழுவவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாக கழுவி, வெண்மைநிற துணியால் முகத்தை இதமாக துடைக்கவும். இம்முறையை வாரம் இருமுறை தொடர்ந்து செய்துவர உங்கள் முகம் பால்போல் வெண்மையாக ஜொலிக்கும். 



    தயிரில் உள்ள சருமப் பளபளப்புக்கு உதவும். கூந்தலுக்கும் நல்லது செய்யும். அரை கப் கடலை மாவில், புளித்த தயிர் சிறிது சேர்த்து, தலை முதல் பாதம் வரை தடவித் தேய்த்துக் குளித்தால் கூந்தலும், சருமமும் சுத்தமாகும். எண்ணெய் பசை சருமம் என்றால், கடலை மாவும், வறண்ட சருமம் என்றால் பயத்த மாவும் உபயோகிக்கலாம்.



    தயிர் ஆடை அல்லது பால் ஆடை எடுத்து சிறிது மஞ்சள் கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ் செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும். 



    கடலை மாவை தயிர் அல்லது ரோஸ் வாட்டருடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவோடு மென்மையாக இருக்கும். 


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad