Saturday, June 21.

Header Ads

  • Breaking News

    முகத்தை பளபளப்பாக்கும் பாதாம்


     முகத்தை பளபளப்பாக்கும் பாதாம்


    பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.



    முகம் பொலிவு பெற, பாதாம் பருப்பை ஊறவைத்து பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்து பேஸ்ட் போல ஆக்கிக்கொள்ளுங்கள். இந்த பேஸ்டை முகத்தில் பூசுங்கள். 25 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவுங்கள்.



    முகம் பொலிவு பெற, பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசலாம்.



    பாதாம் பருப்பை பவுடராக்கி, அத்துடன் சிறிதளவு பன்னீர் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சுருக்கம் நீங்கும்.



    சீனி சேர்க்கப்படாத பாதாம் பால் எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் பருமன் உடையவர்கள் பாதாமின் துணை கொண்டு எடையைக் குறைக்க முயற்சி செய்யலாம். 



    பாதாம் எண்ணெயுடன், தேன் விட்டு நன்கு கலக்கவும். பின்பு அதனை ஒரு சிறிய டப்பாவில் போட்டு ஒரு வாரத்திற்கு உதடுகளில் வறட்சி ஏற்படும் போதெல்லாம் தடவ வேண்டும். இதனால் உதடுகளில் வெடிப்புகள் போவதோடு, உதடுகள் மென்மையாகவும், சற்று உதட்டின் நிறங்களும் கூடும்.



    தினமும் முகத்திற்கு பாதாம் எண்ணெயை துணியால் தொட்டு, முகத்தில் கண்களுக்கு அடியில் மற்றும் கரும்புள்ளிகள் இருந்தால் முகம் முழுவதும் தடவி சற்று நேரம் மசாஜ் செய்யவும். அவ்வாறு தொடர்ந்து செய்தால், முகமானது பளபளப்பாக இருக்கும்.



    பாதாம் எண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து, முகத்திற்கு தடவி காய வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது அழகாக இருக்கும்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad